வெளிநாட்டில் இந்தியர் செய்த உதவியால்... அடித்த கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்! வைரலாகும் வீடியோ
ஐக்கிய அரபு அமீரகத்தில் பூனையை காப்பாற்றிய இந்தியருக்கு, கனவிலும் நினைத்த பார்க்க முடியாத அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் நாட்டில் டெய்ரா பகுதியில் அல் மராரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில், இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பலர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் சிலர் வீட்டில் பூனை வளர்த்து வருகின்றனர். இதனால் அந்த குடியிருப்பில் இருக்கும் பூனைகள் வீட்டில் இருந்து அவ்வப்போது வெளியேறி, வீட்டின் சுவர்களில் ஏறி அங்கும், இங்கும் செல்வது வழக்கம். அதன் படி சம்பவ தினத்தன்று, குடியிருப்பின் மூன்றாவது மாடியில் பூனை ஒன்று திடீரென்று அங்கிருக்கு கீழே தவறி விழுந்துள்ளது.
இதை அந்த குடியிருப்பில் வசித்து வந்த கேரளாவின் கோதமங்கலம் பகுதியை சேர்ந்த நசீர் முகமது என்பவர் பார்த்து விட்டதால், உடனே அங்கு குடியிருந்த கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்த அப்துல் ரசீத் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த மேலும் இருவரை தன்னுடன் அழைத்து அந்த பூனையை மீட்க முயற்சி மேற்கொண்டார்.
Proud and happy to see such acts of kindness in our beautiful city.
— HH Sheikh Mohammed (@HHShkMohd) August 24, 2021
Whoever identifies these unsung heroes, please help us thank them. pic.twitter.com/SvSBmM7Oxe
இதற்காக தன்னிடம் இருந்த டவலை பூனை விழும் பகுதியில் வலை போல் விரித்து பிடித்து கொண்டார். அதன் படி, மாடியில் இருந்து விழுந்த பூனை அதிர்ஷ்டவசமாக இவர்கள் விரித்த துணியில் விழுந்தது.
இதனால் அந்த பூனை காயம் ஏதுமின்றி தப்பியது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் பரவியதால், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வந்தது.
இதற்கிடையில், இந்த வீடியோ குறித்து துபாய் நாட்டின் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் கவனத்திற்கும் செல்ல, உடனே அவர் பூனையை மீட்ட 2 மலையாளிகள் மற்றும் பாகிஸ்தானியர்களை பாராட்டியதுடன், தனது உதவியாளர் மூலம் பூனையை மீட்ட 4 பேருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் பரிசி வழங்கியுள்ளார்.
இது குறித்து நசீர் முகமது கூறுகையில், எனக்கு பூனைகள் பிடிக்கும். மாடியில் இருந்து பூனை தவறி விழுந்ததை பார்த்ததும் அதனை காப்பாற்ற முயன்றேன். கடவுள் அருளால் பூனை பத்திரமாக காப்பாற்றப்பட்டது.
ஆனால், இதற்காக எனக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.