டிவில்லியர்ஸ் இப்படி பண்ணிட்டாரே! கடைசி நேரத்தில்... ஆர்.சி.பி தோல்வியடைந்த நிலையில் நண்பன் மீது குறை கூறிய கோலி
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியடைந்த நிலையில் அணியின் நட்சத்திர வீரர் மீது குறை கூறி கேப்டன் கோலி பேசியுள்ளார்.
இப்போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்பின்னர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடியது.
ஒரு கட்டத்தில், அந்த அணிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, புவனேஷ்வர் குமார் பந்துவீச டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தார். எப்படியும் 2 சிக்ஸர்கள் பறந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புவனேஷ்வர் குமாரின் அபார பந்துவீச்சு அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
ஐதராபாத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, இந்த போட்டியை விரைந்து முடிக்க யோசித்தோம்.
ஆனால் கடைசி வரை எடுத்துச் சென்று தவறு செய்துவிட்டோம். அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த நிலையில், நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான் மேக்ஸ்வெல் ரன் அவுட்டாகி திருப்புமுணை ஏற்பட்டது.
டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தால் ஆட்டம் எப்போதுமே ஆர்சிபியின் கையில்தான் இருக்கும். ஆனால், இந்த போட்டியில் கடைசி நேரத்தில் ஆட்டம் கையைவிட்டு போனது.
புவனேஷ்வர் குமாரால் கடைசி ஓவரில் கட்டுப்படுத்த முடியும் என்பதை நாங்கள் அறிவோம். எனினும் சொதப்பிவிட்டோம். மற்றபடி எங்கள் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததது என கூறியுள்ளார்.