பாகிஸ்தானுடன் இந்தியா படுதோல்வி! டோனி ஆலோசகராக வந்ததால் கேப்டன் கோலியின் கைகள் கட்டப்பட்டதா? ரசிகர்கள் விமர்சனம்
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா மரண அடி வாங்கியுள்ள நிலையில் இந்திய அணியில் கோலியின் முடிவு எடுக்கும் அதிகாரம், சுதந்திரமாக செயல்படும் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டதோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த போட்டியில் இக்கட்டான நேரத்தில் இந்திய அணியின் கேப்டன் கோலி சரியாக முடிவு எடுக்க முடியாமல் திணறியதாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் பாபர் ஆசாம் அதிரடியாக புல் ஷார்ட்களை அடித்தார்.
ஆனால் அவருக்கு தொடர்ந்து இந்திய அணி பவுலர்கள் ஷார்ட் பந்துகளை போட்டு வந்தனர். அவர் ஷார்ட் பந்துகளில் சிக்ஸ் பறக்க விடுகிறார் என்று தெரிந்தும் கூட தொடர்ந்து ஷார்ட் பந்துகளை இந்திய அணி வீரர்கள் வீசியது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
இந்திய பவுலர்களுக்கு யார் இந்த மாதிரியான திட்டங்களை, ஆலோசனைகளை எல்லாம் சொல்கிறார் என்ற கேள்வி எழுந்தது. தனிப்பட்ட முடிவு அணியில் கோலி மட்டுமே தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க கூடாது என்றுதான் தோனி கொண்டு வரப்பட்டார். ரோஹித்திற்கும் முழு பவர் வழங்கப்பட்டது . அதன் படியே நேற்றைய ஆட்டத்தில் கோலி பெரிதாக தனிப்பட்ட முடிவுகளை எடுத்ததாக தெரியவில்லை.
இதனால் கோலியின் முடிவு எடுக்கும் அதிகாரம், சுதந்திரமாக செயல்படும் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அணியின் மென்டர் , பயிற்சியாளர், துணை கேப்டன், மூத்த வீரர்கள் என்று பலரின் அறிவுரையால் ஆட்டத்தில் கோலி சரியாக முடிவு எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்டு உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முக்கியமாக டோனி வந்த பின் கோலியின் தனிப்பட்ட ஆக்ரோஷம் மொத்தமாக குறைந்துவிட்டது. கோலியின் பலமே அவரின் ஆக்ரோஷம்தான். கோலி கொஞ்சம் ஆக்ரோஷப்பட்டால் அடுத்த ஓவரில் சிக்ஸ் பறக்கும்.
ஆனால் நேற்று கோலியோ ஒரு ஜென் துறவி போல செயல்பட்டார். டோனி வந்த பின் அணியில் மிஸ்ஸாகும் முக்கியமான விஷயமாக இது பார்க்கப்படுகிறது. அணியில் கேப்டன் மட்டும் முடிவு எடுக்காமல் பலர் தொடர்ந்து அறிவுரை சொல்வதால் திட்டங்களை வகுப்பதில் சிக்கல் ஏற்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.