டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்த கோலி! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணியில் இவர்களா?
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ராஜினாமா செய்வதாக அறிவித்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் அது தொடர்பிலான பின்னணி கசிந்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை தழுவியதால் கோலி இந்த முடிவு எடுத்ததாக தகவல் வெளியானது.
கடந்த அக்டோபர் மாதம் டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்ததார். அதன் பின் ஐ.பி.எல். தொடரிலிருந்தும் கேப்டனாக விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.
டி20 மற்றும் ஒருநாளுக்கு 2 கேப்டன்கள் இருக்க முடியாது என்று கூறிய பி.சி.சி.ஐ., கோலியை ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது. இந்த நிலையில் தான் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் நடைபெற்றது.
இந்த தொடரில் இந்தியா இழந்தால் கோலியின் டெஸ்ட் பதவியையும் பறிக்க பி.சி.சி.ஐ. தயாராக இருந்தது. இதனை அறிந்த விராட் கோலி, கடுமையாக செயல்பட்டு முதல் டெஸ்டில் வென்றார். 2வது டெஸ்டில் திடீர் காயம் என்று கூறி அவர் விளையாடவில்லை.
ஆனால், மூன்றாவது டெஸ்டில் இந்தியா தோற்றது. இதனால் பி.சி.சி.ஐ. பதவியை பறிக்கும் முன்பே நாமே ராஜினாமா செய்துவிடவோம் என்ற முடிவுக்கு கோலி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், கேப்டனாக சுதந்திரமாக விராட் கோலியால் செயல்பட முடியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விராட் கோலி சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானேவை நீக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். அதற்கு டிராவிட் ஒப்பு கொள்ளவில்லை.
இதனால் இனி கேப்டனாக தொடர்வதில் அர்த்தமில்லை என்று கோலி இந்த முடிவுக்கு வந்துவிட்டார் என கூறப்படுகிறது.
விராட் கோலியின் இந்த திடீர் முடிவுக்கு பி.சி.சி.ஐ.யின் முக்கிய நிர்வாகிகளும் காரணம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.