நிபந்தனைகளுடன்... இந்தியர்களுக்கு Visa இல்லாத பயண அனுமதி அறிவித்த மத்திய கிழக்கு நாடு
சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியர்களுக்கு Visa இல்லாத பயண அனுமதியை அறிவித்துள்ளது மத்திய கிழக்கு நாடான ஈரான்.
அதிகபட்சமாக 15 நாட்கள்
விமான பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் இனி விசா இல்லாமல் அதிகபட்சமாக 15 நாட்கள் ஈரானில் தங்க முடியும். பிப்ரவரி 4ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த திட்டத்தில் 4 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட 32 நாடுகளுக்கு Visa இல்லாத பயண அனுமதியை ஈரான் அறிவித்திருந்தது.
அதில், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருக்கும் மக்கள் விசா அனுமதி ஏதுமின்றி, 6 மாதங்களுக்கு ஒருமுறை அதிகபட்சம் 15 நாட்கள் வரையில் ஈரானில் தங்கலாம் என குறிப்பிட்டிருந்தது.
வியட்நாம், தாய்லாந்து, இலங்கை
இதில், இந்த 15 நாட்கள் என்பது எந்த காரணங்களாலும் நீட்டிக்கப்படாது என்றும் குறிப்பிட்டிருந்தனர். சுற்றுலாவுக்கு என மட்டும் ஈரானில் பயணிக்கும் மக்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் ஈரான் நிர்வாகம் விளக்கமளித்திருந்தது.
மேலும், இந்த 6 மாத காலகட்டத்தில் பலமுறை ஈரானுக்கு வந்துசெல்ல வேண்டும் என்றால், அதற்குரிய விசா அனுமதியை பெறவேண்டும் என்றும், விசா இல்லாத பயண அனுமதி என்பது விமானமூடாக ஈரானில் தரையிறங்கும் இந்தியர்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு வியட்நாம், தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளும் Visa இல்லாத பயண அனுமதியை அளித்து வருகிறது.
மட்டுமின்றி, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா இன்றி நுழைவதற்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |