காணாமல் போன பிரபல சமூக ஆர்வலர் பூங்காவில் பிணமாக தொங்கிய அதிர்ச்சி சம்பவம்!
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விட்டாலி ஷிஷாவ் வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் சடலமாக தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விட்டாலி ஷிஷாவ் உக்ரைனில் உள்ள க்யிவ் நகரில் வசித்து வருகிறார்.
இவர் உக்ரைன் நாட்டில் உள்ள பெலாரஸ் மக்களின் நல்வாழ்விற்காக சமூக சேவை அமைப்பு ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அலெக்சாண்டர் லுகாஷென்கோ என்பவர் வெற்றி பெற்றார். தேர்தலில் இவருக்கு எதிராக செயல்பட்டவர்களை அச்சுறுத்த தனி கட்சியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியது.
இவருக்கு பயந்து பலர் அண்டை நாடுகளில் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று காலை வெளியே சென்ற விட்டாலி ஷிஷாவ் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை என்பதால் அவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று காலையில் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.