லண்டனில் இளம் கோடீஸ்வரர் திடீர் மரணம்! திருமணம் முடிந்த 8 வாரத்திற்குள் நடந்த துயரம்
லண்டனில் இளம் கோடீஸ்வரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ள தலைவர்களுடன் மிகவும் நெருக்கமான நட்பை கொண்டிருப்பவர் தான் கோடீஸ்வரர் Vivek Chadha. 33 வயது மதிக்கத்தக்க இவர் பல மில்லியன் பவுண்ட்ஸ் கொண்ட Nine Group-ஐ நடத்தி வந்துள்ளார்.
இது ஒரு விரிவான ஹோட்டல்களை கொண்ட குழு ஆகும்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு Vivek Chadha அங்கிருக்கும் Annabel's night club பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதன் பின் சில மணி நேரங்களிலே, அதாவது ஞாயிற்றுக் கிழமை அதிகாலை மத்திய லண்டனில் உள்ள தன்னுடைய முகவரியில் சரிந்து விழுந்து இறந்து கிடந்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இவர் Chadha என்ற 29 வயது மதிக்கத்தக்க பெண்ணை, லண்டனில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பிரபல ஆங்கில ஊடகமான டெய்லி மெய்லுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், என்ன நடந்தது என்பதை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. நான் கடும் அதிர்ச்சியில் இருக்கிறேன். இன்னும் என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
எட்டு வாரங்களுக்கு முன்பு தான் எங்களுக்கு திருமணம் ஆனது. ஆனால், இப்போது என் வாழ்க்கையே தலை கீழாக மாறிவிட்டது. மனம் உடைந்து போயுள்ளேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
அவரின் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை அறிவதற்கு பிரேதபரிசோதனை நடைபெறவுள்ளது. அவருக்கு தற்போது தான் 33 வயது ஆவதால், அவரது வயதை கருத்தில் கொண்டு, அவருக்கு பெரிய அளவில் உடலில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
அதே சமயம் அவர் லண்டனில் உள்ள தன்னுடைய முகவரியில் இறந்துகிடக்கவில்லை, வேறொரு இடத்தில் இறந்து கிடப்பதாக மற்றொரு தகவல்கள் கூறுகின்றன. இதனால் உண்மையான நிலவரம் இன்னும் வெளியாகவில்லை.
இன்னும் அவரின் மரணம் குறித்து சரியான காரணம் குடுமத்தினருக்கு தெரியவிக்கப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு கிடைத்துள்ள தகவலின் படி, அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவருடைய நண்பர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் திகதி அவர் நடத்தி வந்த Nine Estates Limited என்ற வணிகம் முந்தைய இரண்டு ஆண்டுகளில் 1.3 மில்லியன் பவுண்ட் என மொத்த லாபத்துடன் 2.5 மில்லியன் பவுண்ட் வருவாயை ஈட்டியது.
கடந்த 2015-ஆம் ஆண்டு Vivek Chadha பாராளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சட்டத்திற்காக 100,000 பவுண்ட் நன்கொடையாக வழங்கினார். அதே போன்று கடந்த 2017-ஆம் ஆண்டு இவரின் பணியைப் பாராட்டி இளம் தொழில்முனைவோர் விருதுகளில் Rising Star என்ற விருது கொடுக்கப்பட்ட்டது.
கடந்த 2010-ஆம் ஆண்டு சிவில் இன் ஜினியரிங் முடிந்த இவர் கடந்த 2012-ஆம் ஆண்டி தனது தந்தையுடன் இணைந்து Nine Group-ஐ ஒன்பது குழுவாக நிறுவினார்.
அதுமட்டுமின்றி வணிக மற்றும் குடியிருப்பு முதலீடுகளையும் செய்து வந்தார்.
குறிப்பாக அவரின் நிறுவனம் பிரித்தானியானியாவில் மிகப் பெரிய தனியார் ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மொத்தம் 18 ஹோட்டல்கள் 800-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.