ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் மரணம்
ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள விவேக் யாதவ் என்ற பந்துவீச்சாளர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளார்.
ராஜஸ்தானை சேர்ந்த விவேக் யாதவ் (36) கொரோனாவால் மருவத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விவேக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது கொரோனா உறுதி செய்யப்பட்டது.
விவேக் கடந்த 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடியுள்ளார். இதோடு 18 முதல்தர போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.