இன்று உக்ரைன் போர் தொடர்பில் மிக முக்கிய அறிவிப்பு: புடின் வெளியிட உள்ளதாக ரஷ்ய ஆதரவு அதிகாரி தகவல்
புடின் உக்ரைன் போர் தொடர்பில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக ரஷ்ய ஆதரவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியாக இருக்கும் அறிவிப்பு
இரண்டாம் உலகப்போரின்போது, அப்போது Leningrad என அழைக்கப்பட்ட புனித பீற்றர்ஸ்பர்க் முற்றுகையிடப்பட்டதன் 80ஆவது ஆண்டு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, உக்ரைன் போர் தொடர்பில் புடின் இன்று ஒரு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக Vladimir Rogov என்னும் ரஷ்ய ஆதரவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த Vladimir Rogov, உக்ரைனில் ரஷ்யர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட Zaporizhzhia பகுதியை நிர்வகிக்க ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியாவார்.
Credit: Reuters
அறிவிப்பு வெளியாகுமா?
Vladimir Rogov, புடின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகக் கூறினாலும், அதை கிரெம்ளின் வட்டாரம் உறுதிசெய்யவில்லை.
இன்னொரு விடயம் என்னவென்றால், இதேபோல ஒரு அறிவிப்பு வெளியாகும் என ரஷ்ய அதிகாரிகள் அறிவிப்பு வெளியிடுவார்களாம். ஆனால், கடைசி நேரத்தில் புடின் அறிவிப்பை ரத்துசெய்துவிடுவாராம்.
ஆகவே, அறிவிக்கப்பட்டபடி இன்று புடினுடைய அறிவிப்பு வெளியாகுமா என்பது தெரியவில்லை!