உக்ரைனில் போர் உக்ரமாகும் சூழலில் விளாடிமிர் புடின் செல்வாக்கு உயர்ந்தது! ஆச்சரிய தகவல்
ரஷ்ய ஜனாதிபதி புடினின் செல்வாக்கு அந்நாட்டு மக்களிடையே உயர்வு
உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து நடக்கும் நிலையில் கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்
உக்ரைனில் போர் சண்டை தொடர்ந்து நடைபெறும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக வெளியாகியுள்ள கருத்து கணிப்பு முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் சுமார் 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பியதோடு அவருக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தது.
இந்த நிலையில் உக்ரைன் போருக்கு பிறகு ரஷ்ய மக்களிடம் புடினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று கருத்து கணிப்பு நடத்தியது.
Reuters
இதில் 77 சதவீதம் பேர் புடினை நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். 13 சதவீதம் பேர் மட்டுமே புடினை நம்பவில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும் 81 சதவீம் பேர் நாட்டின் தலைவராக புடினின் செயல்பாடுகளை அங்கீகரித்ததாகவும், 10 சதவீம் பேர் அவரது பணியைப் பற்றி எதிர்மறையான பார்வையை கொண்டிருப்பதாகவும் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.