இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்ட விளாடிமிர் புடின்: ஒரே நாளில் கிடைத்த பேரிடி
உக்ரைனில் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்படுவதை ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கிய பின்னர் ஒரே நாளில் 1200 ரஷ்ய வீரர்கள் கொல்லப்படும் மிக மோசமான நாளை பதிவு செய்த நிலையிலேயே ஜனாதிபதி புடின் தமது வீரர்கள் நிலை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்கள் ஆயுதங்களை உக்ரைன் போருக்கு பயன்படுத்தலாம் என்ற அனுமதி அளித்த பின்னரே, ரஷ்ய தரப்பில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
போர் தொடங்கியதன் பின்னர் இதுவரை விளாடிமிர் புடின் தமது தரப்பில் இழப்பு தொடர்பில் தகவல் வெளியிட்டதே இல்லை. ஆனால் முதல் முறையாக புடின் இழப்புகள் தொடர்பில் மனம் திறந்துள்ளார்.
இதன் உச்சமாக, ஒவ்வொரு மாதமும் குறைந்தது 5,000 ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் கொல்லப்படுவதாக புடின் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் தப்புவதாகவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது 2022 பிப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடங்கிய பின்னர் 135,000 வீரர்களை அந்த நாடு இழந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பத்தாண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா முன்னெடுத்த போரில் இழந்த வீரர்களைவிட இது 5 மடங்கு அதிகம் என்றே தெரிய வந்துள்ளது.
அரை மில்லியன் ரஷ்யர்கள்
ஆனால், 135,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுவது மேற்கத்திய நாடுகளின் கணிப்புகளுக்கு இணையாக உள்ளது என்றே கூறப்படுகிறது.
பிரித்தானியா வெளியிட்டுள்ள தரவுகளில் உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து அரை மில்லியன் ரஷ்யர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, போரில் இதுவரை 125,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரித்தானியா தரப்பு குறிப்பிட்டுள்ளது. அது புடின் குறிப்பிடும் கணக்கில் 10,000 குறைவாக உள்ளது.
உக்ரைன் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது மாதம் 50,000 வீரர்களை உக்ரைன் இழப்பதாகவும், அதில் பாதி காயங்களுடன் வெளியேறுவதாகவும் பாதி பேர்கள் கொல்லப்படுவதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |