இந்தோனேசியாவை சூழ்ந்த கறுப்பு புகை மூட்டம் - பலர் பலியாகியுள்ளதாக தகவல்
இந்தோனேசியாவின் மராபி எரிமலையின் பள்ளம் வெடித்ததில் மலையேறும் 11 பேர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு
இந்தோனேசியாவின் செயலில் உள்ள 127 எரிமலைகளில் ஒன்றான மராபி மலை, ஞாயிற்றுக்கிழமை 9,800 அடி உயரத்திற்கு வெடித்தது.
இதன்போது அப்பகுதியில் 75 மலையேறுபவர்கள் இருந்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Photograph: Antara Foto/Reuters
திங்கட்கிழமை 3 பேர் மீட்கப்பட்டனர். சிறு வெடிப்பு காரணமாக காணாமல் போன 12 பேரை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மூன்று பேரும் பள்ளத்தின் அருகே காணப்பட்டுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுத்துக் கொண்ட வந்துள்ளனர்.
Photograph: Antara Foto/Reuters
இதையடுத்து, அதிக வெப்பம் இருந்து காரணத்தால் சிலர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் எரிமலை சாம்பலால் கார்கள் மற்றும் சாலைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |