நரகத்தில் இருந்து வந்த பூனை? இணையத்தை அதிர்ச்சியாக்கிய எரிமலை வெடிப்பு!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலையில் இருந்து எரிமலைக்குழம்பு வெளியேறும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் எரிமலையில் இருந்து வெளியேறும் எரிமலைக்குழம்பு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ஐஸ்லாந்தின் கெப்லாவிக் விமான நிலையத்திற்கு அருகே கடந்த புதன்கிழமை எரிமலை வெடித்ததாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த எரிமலை வெடிப்பு வீடியோவாக எடுக்கப்பட்டது. இதனை ட்ரோன் புகைப்படக் கலைஞரான பிஜோர்ன் ஸ்டெய்ன்பெக் பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சியைப் பார்த்த பலர் நரகத்தில் இருந்து வந்த பூனை போல எரிமலைக்குழம்பு வெளியேறுவது உள்ளதாக தெரிவித்துள்ளனர். மாக்மா வெடிப்பதால் ஏற்படும் பிளவுகள் மற்றும் கெட்டியான பாறை ஒரு பூனையை ஒத்த வடிவத்தை உருவாக்குகிறது.
Good night and remember, u are awesome! #iceland #volcano #SharingIsCaring pic.twitter.com/zdN4tp1HjL
— Bjorn Steinbekk (@BSteinbekk) August 7, 2022
கமெரா சுற்றி நகரும்போது, எரிமலைக்குழம்பு ஒரு பள்ளத்தாக்கு வழியாக நகர்வதைக் காட்டுவதுடன், அது ஒரு வால் வடிவத்தை அளிக்கிறது.
இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, ட்விட்டரில் 11,000 பார்வைகளையும் நூற்றுக்கணக்கான விருப்பங்களையும் குவித்துள்ளது. இந்த பதிவை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பயனர்கள் ரீ-ட்வீட் செய்துள்ளனர்.