வாக்னர் கூலிப்படைத் தலைவர் மாயம்: பெலாரஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்
ஒரு காலத்தில் புடினுக்காக அகோர கொலைகள் செய்து, பின் அவரையே எதிர்த்த வாக்னர் கூலிப்படைத் தலைவரை இரண்டு வாரங்களாக காணவில்லை.
தலைமறைவு
வாக்னர் கூலிப்படைத் தலைவரான Yevgeny Prigozhin ரஷ்யாவில் ஆட்சியைப் பிடிக்க முயற்சி நடந்ததாக கூறப்பட்ட விடயம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Prigozhin, மாஸ்கோவிலேயே தனது வீரர்களுடன் அணிவகுப்பு நடத்திய நிலையில், பின்னர் பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியான Alexander Lukashenkoவின் மத்தியஸ்தத்தைத் தொடர்ந்து, அவர் பெலாரஸ் புறப்பட்டதாக கூறப்பட்டது.
Credit: AP
பெலாரஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
ஆக, Prigozhin பெலாரஸில் இருப்பதாக பலரும் எண்ணிக்கொண்டிருக்க, பெலாரஸ் ஜனாதிபதி Alexander Lukashenko வெளியிட்டுள்ள தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், Prigozhin பெலாரஸில் இல்லை என்று கூறியுள்ளார் அவர்.
Credit: AFP
சமீபத்தில் Prigozhinஉடைய வீட்டை ரஷ்ய படைகள் சோதனையிட்டன. அவரது வீட்டில் தங்கம் முதலான விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன், ஃப்ரேம் செய்யப்பட்ட துண்டிக்கப்பட்ட தலைகளைக் காட்டும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், சுமார் இரண்டும் வாரங்களாக Prigozhinஐக் காணாததால், அவருக்கு என்ன ஆயிற்று, அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த விடயங்கள் மர்மமாகவே நீடிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |