சிறுநீரக கல்லை எளிய முறையில் கரைக்க வேண்டுமா? இதோ அருமையான சித்த மருத்துவம்!
இன்றைய காலத்தில் பலரும் சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பெரும் வலியை தரக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று.
மிகச் சிறிய படிவங்கள் தேங்கி, கற்களாக உருவாகி சிறுநீரகத்தில் தங்கிவிடுகின்றன. இது வலியை ஏற்படுத்தாதவரை யாரும் இதை கண்டுபிடிப்பது இல்லை.
சிறுநீரகத்தில் கல் இருந்து, அது சிறுநீர்ப்பாதை வழியாக நகர்ந்து வெளியேறும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது.
இது சிறுநீர் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான் வலி கடுமையாகும். எனவே இவற்றை ஆரம்பத்திலே கட்டுப்படுத்த சில எளிய மருத்துவ முறைகள் உள்ளன. தற்போது அதில் ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருள்
- பூளை பூ - ஒரு கைப்புடி அளவு
- தண்ணீர் - 200 மி.லி
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.
தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் இந்த தண்ணீர் உடன் பூளை பூ சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
- தண்ணீர் 100 மி.லி அடையும் வரை கொதிக்க விடவும்.
பிறகு தண்ணீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இந்த தண்ணீரை தொடர்ந்து காலையில் குடித்து வர சிறுநீரக கல் சமந்தமான எல்லா பிரச்சனைகளும் நீங்கும்.
- மேலும் இவ்வாறு உருவான தண்ணீரை ஒரு வாரம் குடித்து வர சிறுநீரக கல் முற்றிலுமாக கரைந்து விடும்.