படையெடுக்கும் ஜெட் விமானங்கள்.. சீனா-தைவான் இடையே போர் மூளும் அபாயம்!
தைவானின் வான்வெளியில் 19 போர் விமானங்களை சீனா அனுப்பியுள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தைவான் பாதுகாப்பு அமைச்சகம் அளித்த தகவலின் படி, வியாழக்கிழமை சீனாவின் 12 J-16 போர் விமானங்கள் மற்றும் இரண்டு அணுசக்தி திறன் கொண்ட H-6 விமானங்கள் உட்பட பல ஜெட் விமானங்கள் தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் நுழைந்தது.
நிலைமை மோசமடைந்ததால் சீனா விமானங்களை எச்சரிப்பதற்காக தைவான் விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 100 க்கும் மேற்பட்ட சீன விமானங்கள் தைவான் வான்வெளியில் நுழைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தைவானை தனது மாகாணங்களில் ஒன்றாக கருதும் சீனா, தொடர்ந்து அநநாட்டின் மீதாக அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம், சுயாட்சி நாடான தைவான், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இராணுவத்திற்கான நிதியை 8.7 பில்லியன் டொலர்களை அதிகரிப்பதாக அறிவித்தது.
சீனாவுடன் அதிகரித்து வரும் பதற்றத்தின் பின்னணியில் புதிய ஏவுகணைகளுக்கான நிதி உட்பட பாதுகாப்பு துறைக்கான நிதியை அதிகரித்திருக்கிறது.