விருது பெறும் விழாவில் இஸ்ரேல் குறித்து கருத்து... வேலையை இழந்த பெண்
காஸாவில் இஸ்ரேல் முன்னெடுப்பது இனப்படுகொலை என பதிவு செய்த நர்ஸ் ஒருவரை நியூயார்க் சிட்டி மருத்துவமனை ஒன்று வேலையைவிட்டு நீக்கியுள்ளது.
ஏற்கனவே எச்சரித்திருந்ததாக மருத்துவமனை
பாலஸ்தீன வம்சாவளி அமெரிக்க செவிலியரான Hesen Jabr என்பவரியே, மருத்துவமனை நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. மகப்பேறு தொடர்பாக அவர் ஆற்றிய பங்களிப்புக்கு அளிக்கப்பட்ட விருதினைப் பெற்றுக்கொண்டு பேசிய Hesen Jabr, காஸாவில் இஸ்ரேல் முன்னெடுப்பது இனப்படுகொலை இன்றி வேறென்ன என்றார்.
ஆனால் தமது தனிப்பட்ட கருத்துகளை பணியிடத்தில் பதிவு செய்ய வேண்டாம் என ஏற்கனவே அவரை எச்சரித்திருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. மே 7ம் திகதி விரு வழங்கப்பட்டதாக Hesen Jabr தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
குறித்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் போதே இஸ்ரேல் தொடர்பிலும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதே மாதத்தில் வேலையை விட்டு நீக்கியுள்ளதாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.
பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 36,000
காஸா போர் நாட்களில் தங்கள் பிள்ளைகளை இழக்கும் தாய்மார்கள் தொடர்பில் Hesen Jabr குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்த விருதானது தமக்கு மிக நெருக்கமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 36,000 கடந்துள்ளது. இஸ்ரேலின் கடும்போக்கு நடவடிக்கைகளால் காஸா பகுதியில் கடும் பட்டினி, உணவு தட்டுப்பாடு என மிக மோசமான சூழல் நிலவுகிறது.
மொத்தமுள்ள மக்கள்தொகையில் பெரும்பலானோர் போரினால் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |