மாறி மாறி துப்பாக்கிச்சூடு! கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்ட பதற்றம்
வடகொரியா கடந்த சில நாட்களாக நடத்திய ஏவுகணை சோதனைகள் போர் பதற்றத்தை ஏற்படுத்தியது
எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி வடகொரிய கப்பலை எச்சரிக்கை செய்யும் விதமாக தென் கொரிய துப்பாக்கிச்சூடு நடத்தியது
வடகொரியா, தென்கொரியா நாடுகள் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி வடகொரியா அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் அண்டை நாடான தென் கொரியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், வடகொரியாவின் வர்த்தக கப்பல் தங்கள் நாட்டின் கடற்பரப்பிற்குள் நுழைந்ததாக தென்கொரிய கடற்படை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரித்துள்ளது.
(AP Photo/Ahn Young-joon)
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியாவும் வானத்தை நோக்கி 10 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இருநாடுகளும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்தியது கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Reuters: Jo Yong-Hak)