இன்னும் மிக மோசமான மாறுபாடுகள் உலகில் பரவும்: எச்சரிக்கும் சீனாவின் வெளவால் பெண்
சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய வெளவால் பெண் வெளியிட்டுள்ள புதிய மாறுபாடுகள் தொடர்பன தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வெளவால் பெண்மணி என அறியப்படும் Shi Zhengli என்ற வைராலஜிஸ்ட் கொரோனா மாறுபாடு தொடர்பில் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பல நாடுகள் கட்டுக்குள் கொண்டுவர திணறும் நிலையில், இதுவே கொரோனா மாறுபாடுக்கு வழிவகுக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
கொரோனா தொற்று தொடர்ந்து மாறுபடும் எனவும், அதனுடன் நாம் வாழ நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளுக்கு நாள் அதிகமாகும் பாதிப்பு எண்ணிக்கை என்பது கொரோனா தொற்றின் அடுத்தடுத்த மாறுபாடுக்கான காரணமாக அமையும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றானது 600 முறை மாறுபாடு காணலாம் எனவும், ஒவ்வொரு முறையும் அதன் தாக்கம் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய தடுப்பூசிகளால் இந்த மாறுபாடுகளை எதிர்கொள்ள முடியாமல் போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இஸ்ரேலிய நிபுணர்களின் ஆய்வில், இனி வரும் மாறுபாடுகள் மிக விரைவாக பரவும் தன்மையில் இருக்கும் என கண்டறிந்துள்ளனர்.
மட்டுமின்றி, தற்போது அமெரிக்காவில் கண்டறிந்துள்ள மாறுபாடானது டெல்டா மற்றும் லாம்பா மாறுபாடுகளை விட மிக ஆபத்தானதாக இருக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும், புளோரிடா மாகாணத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்ற நிலையில், ஆர்கன்சாஸ், லூசியானா மற்றும் மிசோரி பகுதி மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.