ரூ.51,482 கோடியை நன்கொடையாக வழங்கிய உலக பணக்காரர்
வாரன் பஃபெட் 6 பில்லியன் டொலர் நன்கொடை வழங்கியுள்ளார்.
வாரன் பஃபெட்
பெர்க்ஷயர் ஹாத்வே(Berkshire Hathaway) நிறுவனத்தின் தலைவரான வாரன் பஃபெட், உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவர் ஆவார்.
அமெரிக்காவை சேர்ந்த 94 வயதான வாரன் பஃபெட், 152 பில்லியன் டொலர் சொத்துமதிப்புடன், உலகப் பணக்காரர் பட்டியலில் 5வது இடத்தில் இருந்தார்.
இந்நிலையில், Berkshire Hathaway நிறுவனத்தில் உள்ள தனக்கு சொந்தமான 6 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் 51,482 கோடி) மதிப்பிலான பங்குகளை, 5 அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
6 பில்லியன் டொலர் நன்கொடை
பில்கேட்ஸின் பில்& மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் நடத்தும் சூசன் தாம்சன் பஃபெட் அறக்கட்டளை, ஷெர்வுட் அறக்கட்டளை, ஹோவர்ட் ஜி.பஃபெட் அறக்கட்டளை மற்றும் நோவோ அறக்கட்டளை ஆகிய 5 அறக்கட்டளைகளுக்கு இந்த பங்குகளை வழங்கியுள்ளார்.
இத்துடன், 2006 ஆம் ஆண்டு முதல் வாரன் பஃபெட் வழங்கிய நன்கொடையின் அளவு 60 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
முன்னதாக, தனது செல்வத்தில் 99.5 சதவீதத்தை, நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த 6 பில்லியன் டொலர்நன்கொடையை தொடர்ந்து, உலக பணக்காரர் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த வாரன் பஃபெட், 6வது இடத்திற்கு சென்று விட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |