இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து தமிழக வீரர் விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ம் திகதி nottingham மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலைியல், இந்தியன்ஸ்-County Select XI அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி கடந்த ஜூலை 20ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பயிற்சி ஆடத்தில் County Select XI அணிக்காக வாஷிங்டன் சுந்தர் பீல்டிங் செய்த போது விரலில் பந்த தாக்கி காயம் ஏற்பட்டது.
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தாருக்கு 6 வாரங்கள் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.
காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தெடாரிலிருந்து விலகும் 3வது வீரர் வாஷிங்டன் சுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே காணம் காரணமாக Avesh Khan, சுப்மன் கில் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.