தமிழ்நாடு அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்.., மாணவர்களை தண்ணீர் குடிக்க வைக்க புதிய முடிவு
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
வாட்டர் பெல் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அதாவது பள்ளிகளில் உள்ள மாணவிகள் மற்றும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

எழுத்தாளராக வேண்டும் என்று நினைத்த எலக்ட்ரீஷியனின் மகள்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரி
காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டர் பெல் அடித்து பள்ளி மாணவர்களை தண்ணீர் குடிக்க வைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் உடல்நலனை காக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், வகுப்பறைகளை விட்டு மாணவர்கள் வெளியில் செல்லாமல் இருக்கும் வகையிலே தண்ணீர் குடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இந்த திட்டமானது ஏற்கனவே கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |