ஹமாஸ் பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க இதுதான் சிறந்த வழி: இலங்கைத் தமிழர் கூறும் யோசனை
ஹமாஸிடம் பிணைக்கைதிகளாக இருந்த அமெரிக்கப் பெண்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ள செய்தி, அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல, உலக முழுவதிலுமுள்ள அமைதி விரும்பிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள்
ஹமாஸ் ஆயுதக்குழு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதுடன், சுமார் 200 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றது.
அப்படி பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்களில், அமெரிக்கர்களான Judith (59) மற்றும் அவரது மகளான Natalie Raanan (17) ஆகிய இருவரும், கத்தார் நாட்டின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் ஹமாஸிடமுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க இதுதான் வழி
இந்நிலையில், Oxfam என்னும் பிரித்தானிய தொண்டு நிறுவனக் கூட்டமைப்பின் தலைவரான தனஞ்செயன் ஸ்ரீஸ்கந்தராஜா (Dhananjayan Sivaguru ("Danny") Sriskandarajah), போர்ச்சூழலின் தீவிரத்தைக் குறைப்பதே, ஹமாஸ் பிடியில் மீதமுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க சிறந்த வழி என்று கூறியுள்ளார்.
இலங்கையில், இலங்கைத் தமிழ் பெற்றோருக்கு பிறந்தவரான தனஞ்செயன், இளம் வயதில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தவராவார்.
#Newsnight #Gaza_under_attack
— ian walker (@saucepieces) October 17, 2023
CEO of Oxfam GB explains world leaders need to be honest, only a ceasefire will halt civilian casualties in #Gaza
A #humanitarian corridor alone cannot in a small densely populated area like Gaza provide a sufficient solution to end the carnage. pic.twitter.com/51gamG7a2q
இப்போதைய சூழலில், மோதல் மேலும் அதிகரிப்பது நல்லதல்ல என்று கூறியுள்ள அவர், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் மோதல் சுழலின் தீவிரத்தைக் குறைக்கத் துவங்குவதே, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் காப்பாற்ற உதவும் என்று கூறியுள்ளார் அவர்.
மேலும், தங்கள் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 30 பேர் காசாவில் மீட்புப் பணிக்காக சென்றுள்ளதாக தெரிவித்த தனஞ்செயன், ஆனால், மக்களுக்கு உதவுவதற்காக சென்றுள்ள அவர்களே, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடவேண்டிய ஒரு சூழல் அங்கு நிலவுவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |