சீனாவுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்! ஜனாதிபதி திட்டவட்டம்
சீனாவின் அழுத்தத்திற்கு தைவான் அடிபணியாது என ஜனாதிபதி Tsai Ing-wen கூறியுள்ளார்.
மீண்டும் சீனாவுடன் தைவானை ஒன்றிணைப்பதை நிறைவேற்றுவேன் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்த நிலையில், அவருக்கு பதில் அளிக்கும் வகையில் ஜனாதிபதி Tsai Ing-wen இவ்வாறு கூறியுள்ளார்.
தைவானின் தேசிய நாள் உரையின் போது பேசிய ஜனாதிபதி Tsai Ing-wen, சீனாவின் அழுத்தத்திற்கு தைவான் அடிபணியாது மற்றும் அதன் ஜனநாயக வாழ்க்கை முறையை தொடரும்.
ஜனநாயகத்தை முதல் கேடயமாக பயன்படுத்தி தைவான் நிற்கிறது.
சீனா எங்களுக்காக அமைத்த பாதையை ஏற்க தைவானை கட்டாயப்படுத்த முடியாது. சீனா சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் இறையாண்மையை வழங்கவில்லை.
சீனாவின் இராணுவ விமானங்கள் தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் அத்துமீறி பறப்பதால், தேசிய பாதுகாப்பு மற்றும் விமானப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தைவான் அதிரடியாக செயல்படாது, ஆனால் அதன் பாதுகாப்பை பலப்படுத்தும் என ஜனாதிபதி Tsai Ing-wen தெரிவித்துள்ளார்.