பாகிஸ்தானை விட அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களுக்கு இந்திய அரசு ஒப்புதல்
பாகிஸ்தான் பயன்படுத்திய சீன ஏவுகணைகளை விஞ்சும் ஆயுதங்களை நிரப்ப பாதுகாப்பு அமைச்சகம் மூன்று படைகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
சுட்டு வீழ்த்தியதாக
அதில், நீண்ட தூர வெடிமருந்துகள், பீரங்கி குண்டுகள், காமிகேஸ் ட்ரோன்கள் மற்றும் வான்-வான் ஏவுகணைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, தரையிலிருந்து வான் ஏவுகணை பேட்டரிகள் மற்றும் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, நான்கு பாகிஸ்தானிய சீனாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களையும் இரண்டு பெரிய விமானங்களையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் போது இரண்டு F-16 போர் விமானங்கள் பகுதியளவு சேதமடைந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
சிறப்பாக செயல்பட்டதாக
நான்கு நாள் மோதலின் போது இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள், S-400 ஏவுகணை அமைப்புகள் மற்றும் M777 ஹோவிட்சர்கள் சிறப்பாக செயல்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
மட்டுமின்றி, ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு மூன்று எதிரி விமானங்களை வீழ்த்தியுள்ளது. மேலும், ஒரு சீன LY-80 ரேடார், இரண்டு AN TPQ-43 அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கண்காணிப்பு ரேடார் மற்றும் சீன HQ-9 ரேடாரின் ஒரு அலகு ஆகியவற்றை அழித்ததாகவும் அறிக்கை காட்டுகின்றன.
பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது விமானப்படை 19 பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளையும், கிட்டத்தட்ட சம எண்ணிக்கையிலான பிரெஞ்சு SCALP சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளையும் ஏவியதாக அறிக்கைகள் காட்டுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |