இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம்
இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் செயல்திறன் குறித்து கருத்து தெரிவிக்க சீன இராணுவம் மறுத்துவிட்டது.
PL-15E ஏவுகணை
செயலிழந்த நிலையில் PL-15E ஏவுகணை ஒன்றை இந்தியா மீட்டெடுத்ததாக வெளியான செய்திகளையும் சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் ஜாங் சியோகாங் மறுத்துள்ளார்.
PL-15E ஏவுகணை என்பது சீனாவால் தயாரிக்கப்பட்ட இந்த வகையான மிகவும் மேம்பட்ட ஏவுகணை என்று கூறப்படுகிறது. PL-15E ஏவுகணையானது ஏற்றுமதி செய்வதற்கான ஆயுதம் என்றும், இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பு கண்காட்சிகளில் பல முறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜாங் கூறியுள்ளார்.
மே 7-10 திகதிகளில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலுக்குப் பிறகு சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் முதல் ஊடக சந்திப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள், அதை ஒருபோதும் மறுக்க முடியாது என்றும் ஜாங் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இராணுவ மோதலில் பாகிஸ்தானுக்கு சீனா வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் உதவிகளை வழங்கியதாகவும்,
சீன ஆயுத அமைப்புகள் சராசரிக்கும் குறைவாக செயல்பட்டதாகவும் இந்திய அதிகாரிகளின் கருத்துகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்கள். பாகிஸ்தானால் சீன ஆயுத விநியோகங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதையும்,
இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து உறவுகளையும் கருத்தில் கொண்டு, சீன உத்தியோகப்பூர்வ ஊடகங்கள் இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதலில் கணிசமான ஆர்வத்தைக் காட்டின.
81 சதவீதம் சீனாவில் இருந்து
மட்டுமின்றி, சீனா தயாரித்துள்ள ஆயுதங்களின் செயல்திறனை போர்க்களத்தில் சோதித்தறியும் வாய்ப்பாகவும் இந்தியா - பாகிஸ்தான் மோதலை சீனா பயன்படுத்திக்கொண்டது.
ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மே 7 ஆம் திகதி ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.
மே 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இந்திய ராணுவ தளங்களைத் தாக்க பாகிஸ்தான் முயன்றது. பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு இந்தியத் தரப்பு கடுமையாகப் பதிலளித்தது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) சமீபத்திய அறிக்கையின்படி, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய ஆயுத சப்ளையராக சீனா உருவெடுத்துள்ளது. 2020 முதல் 2024 வரை பாகிஸ்தான் கொள்முதல் செய்த ஆயுதங்களில் 81 சதவீதம் சீனாவில் இருந்தே வந்துள்ளது.
இதில் மேம்படுத்தப்பட்ட போர் விமானங்கள், ரேடார், கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவை அடங்கும். பாகிஸ்தான் விமானப்படையின் (PAF) முக்கிய அம்சமான J-17 விமானங்களை இரு நாடுகளும் கூட்டாகவே தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |