இந்தியாவிற்காக வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் - யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?
காமன்வெல்த் விளையாட்டு தொடரில், பளுதூக்கும் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி
2026 காமன்வெல்த் விளையாட்டு தொடர், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், ஆண்களுக்கான பளுதூக்குதல் 65 கிலோ பிரிவில், இந்தியா சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்னாட்ச் (Snatch) முறையில் 126 கிலோவையும், கிளீன் அண்ட் ஜெர்க் (Clean and jerk) முறையில் 160 கிலோவையும் என மொத்தமாக 286 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப் பாண்டி சிறு வயது முதலேபளுதூக்குதலில் ஆர்வம் காட்டி வருகிறார்.
2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்குபெற்ற அவர், 62 கிலோ எடைப்பிரிவில் 266 கிலோ எடையைத் தூக்கி 6வது இடத்தைப் பிடித்திருந்தார்.
2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக சில ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டியில் விளையாட முடியாத நிலை இருந்தது. 2022 காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பங்குபெறும் வாய்ப்பை இழந்தார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற 2025 காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் 296 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 299 கிலோதூக்கி ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார்.
Proud Moment for Indian Weightlifting!
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) July 27, 2026
Many congratulations to Raja Muthupandi for clinching Silver in Men's 65kg Weightlifting. #Cheer4Bharat #CWG2026 pic.twitter.com/qjldVR9ja5
இது குறித்து கருத்து தெரிவித்துள்ளராஜா முத்துப்பாண்டி, "தங்கம் வெல்வதற்காக நாங்கள் முழு முயற்சியையும் வெளிப்படுத்துவோம் என்று என் பயிற்சியாளர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.ஆனால், நான் சிறப்பாகச் செயல்படவில்லை. அதனால் நான் நிச்சயமாக ஏமாற்றமடைந்துள்ளேன்.
இந்த வெற்றியை என் பெற்றோருக்கும், என் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கும் சமர்ப்பிக்கிறேன். இங்கு கற்றுக்கொண்ட பாடங்களில் கவனம் செலுத்தி, என் பயிற்சியாளரின் அறிவுறுத்தல்களின்படி பயிற்சி செய்து, இனிவரும் காலங்களில் கடினமாக உழைப்பேன்," என்று தெரிவித்துள்ளார்.
ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது… pic.twitter.com/elI9Q6dUhN
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 27, 2026
இந்திய அணி, ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |