இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையால்... உண்மையை மீண்டும் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
இந்திய ஏவுகணைகள் பாகிஸ்தானுக்குள் பல இலக்குகளைத் தாக்கியதாக அந்த நாட்டின் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரம்மோஸ் ஏவுகணை
பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அதிகாலை 4:30 மணிக்கு இந்தியாவைத் தாக்க திட்டமிட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதற்கு முன்பு, ராவல்பிண்டி விமான நிலையம் உட்பட பாகிஸ்தானின் பல மாகாணங்களை குறிவைத்து இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவியதாக பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
மே 9-10 ஆம் திகதிகளில், இந்திய தாக்குதலுக்கு தக்க பதிலளிக்கும் முறையில் செயல்பட முடிவு செய்தோம். ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அதிகாலை 4.30 மணிக்கு இந்திய தரப்பிற்கு ஒரு பாடம் கற்பிக்க எங்கள் ஆயுதப் படைகள் தயாராக இருந்தன.
ஆனால் தொழுகை நேரம் வருவதற்கு முன்பே, இந்தியா மீண்டும் பிரம்மோஸைப் பயன்படுத்தி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது, ராவல்பிண்டி விமான நிலையம் உட்பட பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களைத் தாக்கியது என அஜர்பைஜானில் ஒரு உரையின் போது ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஷெரீப்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் ஷெரீப் ஒப்புக்கொள்வது இது முதல் முறை அல்ல. மே 10 ஆம் திகதி அதிகாலையில் பாகிஸ்தானுக்குள் உள்ள நூர் கான் விமானப்படை தளம் மற்றும் பிற இலக்குகளை இந்திய ஏவுகணைகள் தாக்கியதை இந்த மாத தொடக்கத்தில் அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்தியாவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் அதிகாலை 2:30 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக ஷெரீப் நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |