சீனாவை கூண்டில் நிறுத்த இது தான் ஒரே தீர்வு: வலுவாக எழுந்த கோரிக்கை
கொரோனா பரவல் விவகாரம் தொடர்பாக உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரட் கோரிக்கை வைத்துள்ளார்.
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்த நாட்டின் மீது விசாரணை முன்னெடுக்க விரும்பின.
நோய்த்தொற்று உருவானது குறித்து சீனாவிடம் விசாரணை நடத்த அவுஸ்திரேலியா தொடர்ந்து வற்புறுத்தியது. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகள் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. இந்த நிலையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரட் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சீனாவின் வளரும் பொருளாதாரம் மற்றும் புவிசார் வற்புறுத்தலை நாடுகள் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும்.
தனி ஒரு நாடாக சீனாவை எதிர்த்தால் அந்த நாட்டைச் சீனா தண்டிக்கும் என்பது உறுதி என கூறினார். மேலும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் மேற்கத்திய நாடுகள் சீனாவை எதிர்க்கதயங்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக நாடுகளுக்கு சீனாவுடன் எதிர்ப்பு இருந்தால், தனியாக எதிர்ப்பதை காட்டிலும் பிற நாடுகளுடன் இணைந்து சீனாவை எதிர்ப்பதே சிறந்தது.
அப்போதுதான் சீனா அந்த நாட்டுக்கு எதிரான இருதரப்பு கொள்கையை செயல்படுத்த முடியாமல் போகும் என்றார் கெவின் ரட்.