நேபாளத்தில் சாலையில் இருந்து விலகி சென்று கவிழ்ந்த பேருந்து: 2 பேர் பலி, 32 காயம்
நேபாளத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 2 பேர் உயிரிழந்து இருப்பதுடன் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பேருந்து விபத்து
நேபாளத்தின் மேற்கு பகுதியில் தனாஹு மாவட்டத்தின் கன்சிகுவாவில் அதிகாலை 5.30 மணியளவில் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்த போது திடீரென சாலையை விட்டு விலகி சென்று கவிழ்ந்தது.
இந்த பேருந்து விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர், 32 பேர் வரை காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Representative image
தரனில் இருந்து பொக்காரா நோக்கி சென்ற பேருந்து திடீரென சாலையை விட்டு விலகி சென்று 10 மீட்டர் கீழே சென்று விழுந்துள்ளது.
பேருந்து ஓட்டுநர் உட்பட 32 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 9 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக பொக்ராவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Getty(Representative image)
இதற்கிடையில் பேருந்து விபத்து குறித்து நேபாள பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |