மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் எங்கள் நாட்டைத் தாக்கினால் உலகப்போர்தான்: புடின் கடும் எச்சரிக்கை
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கியுள்ள ஆயுதங்களைக் கொண்டு உக்ரைன் ரஷ்யாவைத் தாக்கினால் பெரிய அளவில் போர் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார் புடின்.
எங்கள் நாட்டைத் தாக்கினால் உலகப்போர்தான்...
ரஷ்யா, ஈரான், வடகொரியா மற்றும் சீன ஆயுதங்களைக் கொண்டு உக்ரைனைத் தாக்கிவருகிறது. ஆனால், உக்ரைனுடைய மேற்கத்திய கூட்டாளி நாடுகள் வழங்கும் ஆயுதங்களைக் கொண்டு உக்ரைன் ரஷ்யாவைத் தாக்கினால் உலகப்போர் வெடிக்கும் என்று கூறுகிறார் புடின்.
Credit: AFP - Getty
பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ் முதலிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிவருகின்றன. ரஷ்யா உக்ரைனைத் தாக்கினால், உக்ரைன் ரஷ்யாவைத் திருப்பித் தாக்கவேண்டும், எந்த இடத்திலிருந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோ, அதே இடத்தை உக்ரைன் திருப்பித் தாக்கலாம் என்றும், அதற்கு, உக்ரைனுக்கு நாம் வழங்கும் ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்றும் சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கூறியிருந்தார்.
ஆனால், தொடர்ந்து எங்களைத் தூண்டிக்கொண்டே இருந்தால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என புடின் எச்சரித்துள்ளார். நேட்டோ உறுப்பு நாடுகள், குறிப்பாக, ஐரோப்பாவிலுள்ள நாடுகள் அவர்கள் எதனுடன் விளையாடுகிறார்கள் என்பதை கவனித்து எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது என்றும் எச்சரித்துள்ளார் புடின்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |