ஜேர்மனியில் ஏரியில் நீந்தச் சென்ற பிரித்தானிய குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்
ஜேர்மனியில் ஏரி ஒன்றில் நீந்தச் சென்ற பிரித்தானியச் சிறுவர்கள் இருவர் காணாமல் போய்விட்டார்கள்.
இப்போது அவர்கள் இருவரும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.
ஜேர்மனிக்குத் தங்கள் பெற்றோருடன் சுற்றுலா வந்த ஏழு மற்றும் ஒன்பது வயதுடைய பிரித்தானியச் சிறுவர்கள் இருவர் காணாமல் போயுள்ளார்கள்.
வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில் பிள்ளைகளைக் காணாமல் பதறிய பெற்றோர் பொலிசாருக்குத் தகவலளித்துள்ளார்கள்.
உடனடியாக ஏராளம் பொலிசார் அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகே கூடி, பிள்ளைகளைத் தேடத்துவங்கியுள்ளார்கள்.
அப்போது, Simmerath என்ற இடத்திலுள்ள ஏரி ஒன்றில் அவர்களுடைய உடல்கள் கண்டுபிடிக்கப்பட, முதலுதவி அளித்து ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அவர்களைக் கொண்டு சென்றுள்ளார்கள் மருத்துவ உதவிக்குழுவினர்.
ஆனால், அவர்களைக் காப்பாற்ற இயலவில்லை என்றும், அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சுற்றுலா வந்த இடத்தில் அந்த பிரித்தானியர்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்துள்ள நிலையில், அவர்களுடைய கவனக்குறைவு காரணமாக பிள்ளைகள் உயிரிழந்தார்களா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரிக்கத் துவங்கியுள்ளார்கள்.
Credit: Getty