இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் என்ன?
Healthy living
Blood pressue
Main reasons
How to prevent
By Balakumar
இன்று சர்க்கரை நோய், புற்றுநோய்க்கு அடுத்தப்படியாக உயிரை கொல்லும் நோய்களுள் இரத்த அழுத்தமும் ஒன்றாகும்.
இந்நோய் முதலில் 40 வயதைக் கடந்த முதியவர்களுக்குத் தான் ஏற்பட்டு வந்தது. ஆனால் இன்று இளம் வயதினரும் கூட உயர் இரத்த அழுத்த நோய்க்கு ஆளாகின்றனர் என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு ஏற்பட மருத்துவ ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. அவற்றை தெரிந்து கொண்டு இதுபோன்ற பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
அந்தவகையில் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
- நாம் உணவில் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை குறைத்து கொள்வது நல்லது. மனதில் ஏற்படும் கவலைகள், துக்கங்கள் மற்றும் பதற்றமான மனநிலை போன்றவை நமது உடல்நலத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
- மனம் சம்பந்தமான பிரச்சனைகள் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கிறது எனவே மன அழுத்தம் இல்லாதவாறு நம்மை நாம் பாதுகாத்துகொள்ள வேண்டும்.
- புகைக்கும் பழக்கம் கொண்ட நபர்களுக்கு ரத்த நாளங்கள் சுருங்கி போகும் நிலை உண்டாகிறது. இது எதிர்காலத்தில் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாகிறது.
- இரவில் நீண்ட நேரம் கண்விழிப்பவர்கள், சரியான தூக்கம் வராத நபர்கள் போன்றோருக்கு ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. எனவே ஒவ்வொரு நபரும் தினமும் சரியான அளவு ஓய்வு உடல் மற்றும் மனதிற்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம்.
இதனை தடுக்க என்ன செய்யலாம்?
- மாடு, ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை அறவே சாப்பிடுவதை தவிர்த்து, அசைவத்தில் மீன் மட்டும் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
- பூண்டு உடலின் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து ரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கிறது.
- தினமும் காலையில் மாதுளம் பழ சாறு அருந்துபவர்களுக்கு ரத்த அழுத்தம் பிரச்சனை குறைவதோடு, ரத்த அழுத்தம் இல்லாதவர்களுக்கு அது ஏற்படுவதற்கான சாத்தியங்களை தள்ளி போடுகின்றது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US