ஜேர்மனியில் பியர் திருவிழாவுக்கு சென்ற பிரித்தானியருக்கு நேர்ந்த கதி...
ஜேர்மனியின் புகழ்பெற்ற பியர் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற பிரித்தானியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
அந்த தாக்குதல் தொடர்பாக இருவரை ஜேர்மன் பொலிசார் தற்போது கைது செய்துள்ளார்கள்.
ஜேர்மனியின் புகழ்பெற்ற பியர் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற பிரித்தானியர் ஒருவர் தாக்கப்பட்டதுடன், அவருடைய உடைமைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
Munichநகரில் நடைபெற்ற அந்த திருவிழாவில், 35 வயதான அந்த பிரித்தானியரை 18 வயது இளைஞர்கள் இருவர் கத்தியால் குத்தியுள்ளனர். படுகாயமடைந்த அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Credit: Reuters
இதற்கிடையில், போதைப்பொருள் தொடர்பான விவகாரம் ஒன்றிற்காக அவர்கள் மூவரும் சந்தித்திருக்கலாம் என்றும், அப்போது ஏற்பட்ட பிரச்சினையின்போது அந்த இளைஞர்கள் அந்த பிரித்தானியரைத் தாக்கியிருக்கலாம் என்றும் பொலிசார் கருதுகிறார்கள்.
அத்துடன், அவர்கள் அந்த பிரித்தானியரிடமிருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.
திங்கட்கிழமை அந்த இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளார்கள். அவர்கள் கொலைமுயற்சி மற்றும் கொள்ளை ஆகிய குற்றச்செயல்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
Credit: Alamy