டொனால்ட் டிரம்ப்பின் முடிவும் மத்தியகிழக்கின் தலைவிதியும் - நடக்கப்போவது என்ன ?
ஈரானை அணு ஆயுத பலம் பெற்ற நாடாக உருவெடுக்க விடமாட்டோம் என கூறி, கடந்த 13 ஆம் திகதி இஸ்ரேல் அதன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஈரான் மீது ஏவி தாக்குதலை நடத்தியது.
இதில், ஈரானின் பல முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் உயர்மட்ட அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான் இஸ்ரேல் போரில் அமெரிக்க தலையீடு
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்திய ஈரான் இன்று இஸ்ரேல் மீது ஹைபர் சோனிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டுள்ள நிலையில், ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டுமென்றும் அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த போரில் அமெரிக்கா தலையிடுவதன் மூலம், மத்திய கிழக்கில் ரஷ்யா மற்றும் சீன ஆதரவு நிலையில் உள்ள ஒரே நாடான ஈரானில், பிற அரபு நாடுகளில் செய்தது போல் தங்களது சாதகமான ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
மேலும், மத்திய கிழக்கில் உள்ள ஹவுத்தி, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கும் ஈரான் முழு அளவிலான ஆதரவை வழங்கி வருகிறது.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |