பூஜை அறையில் வைக்கப்படும் தண்ணீரை என்ன செய்ய வேண்டும்?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்து மதத்தில் வீட்டில் வைத்து வணங்குவது முதல் கோயில் சென்று வழிப்படுதல் வரை இறைவனை மெய் அன்போடு வழிப்படுவார்கள்.
சிலர் தங்கள் வீட்டுக் கோவிலில் இரவு முழுவதும் குலதெய்வங்களுக்கும், தெய்வங்களுக்கும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பார்கள்.
அவ்வாறு வைக்கப்படும் தண்ணீரை என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் யோசித்துக் கொண்டு இருப்பார்கள். எனவே அதை வைத்து என்ன செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
கோவிலில் வைக்கப்படும் தண்ணீர்
உங்கள் வீட்டுக் கோவிலில் வைத்திருக்கும் தண்ணீரை மறுநாள் செடிகளுக்கு ஊற்றினால், அதை துளசி செடிகளுக்கு ஊற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இது உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மோசமான சூழ்நிலைகள் மற்றும் சிரமங்களைத் தவிர்க்க உதவும்.
தண்ணீர் வைக்க செப்பு பாத்திரத்தை பயன்படுத்தவும்
வீட்டுக் கோவிலில் தண்ணீர் வைக்க எப்போதும் செப்புப் பாத்திரத்தைப் பயன்படுத்தினால் நல்லது. ஜோதிடத்தின் படி நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது.
இதைச் செய்வதன் மூலம், உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகள், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வீட்டில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
பூஜை அறையில் தண்ணீர் வைப்பதன் முக்கியத்துவம்
உங்கள் வீட்டில் உள்ள கோவிலில் தண்ணீர் வைப்பது ஐஸ்வர்யத்தை கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாகவும் இது வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |