மூல நோய் உள்ளவர்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம்?
கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய். பொதுவாக, இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும்.
இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இதனை மருந்துகள் மாத்திரைகள் கொண்டும் கூட எளிய முறையில் சரி செய்ய முடியும். இருப்பினும் எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி ஒரு சில உணவுகள் மூலம் சரி செய்யலாம்.
அந்தவகையில் மூல நோய் உள்ளவர்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொண்டால் இதில் இருந்து விடுபடலாம் என்பதை பற்றி கீழ் காணும் வீடியோ மூலம் பார்த்து தெரிந்து கொள்வோம்.