அணுகுண்டு வீசப்பட்டால் என்ன ஆகும்? அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் ஒருபக்கம், தைவான் விடயத்தில் மிரட்டும் சீனா மறுபக்கம் என எங்கும் பதற்றம்.
இப்படிப்பட்ட சூழலில் அணுகுண்டு வீசப்பட்டால் என்ன ஆகும் என ஆய்வு மேற்கொண்ட அறிவியலாளர்கள் சொல்லும் விடயங்கள் திகிலை ஏற்படுத்துவதாக உள்ளன.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான போர் தொடரும் நிலையில், அவ்வப்போது அணுகுண்டு வீசிவிடுவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துவருகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா முதலான நாடுகள் நிற்கின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒருவேளை அணுகுண்டு வீசப்படுமானால் என்ன நடக்கும் என்பது குறித்த திடுக்கிடவைக்கும் தகவல்களை அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
Credit: Getty
அணு ஆயுதப் போர் வெடிக்குமானால், உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். உணவு இல்லாமல் பட்டினி கிடந்தே முழு உலகமும் அழிந்துபோகும் என எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
அமெரிக்கப் பல்கலைக்கழகமான Rutgers பல்கலை அறிவியலாளர்கள், அணு ஆயுதப்போரின் தாக்கம் குறித்து விலாவாரியாக ஆய்வு செய்துள்ளார்கள். ஆய்வின் முடிவுகள் அதிரவைக்கின்றன!
அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், போரால் உயிரிழக்கும் ஏராளமானவர்கள் போக, அதற்குப் பிறகு உலகம் முழுவதிலும் ஐந்து மில்லியன் மக்கள் பட்டினியால் உயிரிழப்பார்கள் என்கிறார்கள் அவர்கள்.
Credit: Getty
போருக்குப் பிந்தைய இரண்டாவது ஆண்டில், பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் சீனா முதலான நாடுகளில் வாழும் மக்களில் கிட்டத்தட்ட அனைவருமே உயிரிழந்திருப்பார்கள் என்று கூறி வயிற்றில் புளியைக் கரைக்கிறது அந்த ஆய்வு.
ஆனால், அவுஸ்திரேலியா, அர்ஜெண்டினா போன்ற நாடுகளிலோ மனிதர்கள் உயிரிழக்கமாட்டார்கள் என்றும், ஆனாலும், கால்நடைகள் அனைத்தும் உயிரிழந்துவிடும் என்றும், மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யப்படாது என்றும் கூறுகிறது அந்த ஆய்வு.
Credit: Getty