இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு எங்கு நடக்கும்? அவர் எங்கு நல்லடக்கம் செய்யப்படுவார்? வெளியான தகவல்
பிரித்தானியா மகாராணியின் கணவரும், இளவரசருமான பிலிப் உயிரிழந்த நிலையில், அவர் இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்கம் செய்யப்படும் இடம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் சற்று முன் தனது கணவர் பிலிப்(99) காலமானதாக அறிவித்தார்.
இதையடுத்து இவரின் மரண செய்தியை கேட்டு, உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலையும், பிரித்தானிய மக்கள் தங்கள் இரங்கலையும் பதிவு செய்து வருகின்றனர்.
It is with deep sorrow that Her Majesty The Queen has announced the death of her beloved husband, His Royal Highness The Prince Philip, Duke of Edinburgh.
— The Royal Family (@RoyalFamily) April 9, 2021
His Royal Highness passed away peacefully this morning at Windsor Castle. pic.twitter.com/XOIDQqlFPn
இளவரசர் மரணம் காரணமாக, 7 நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்படும். பிலிப் ஒரு அரசகுடும்ப உறுப்பினர் என்பதால், அவருக்கு மாநிலத்திற்குரிய மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும்.
பிலிப் இறுதிச்சடங்கிற்கான அனைத்து வேலைகளையும், பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள லார்ட் சேம்பர்லேன் அலுவலகம் ஒருங்கிணைக்கும். உடல் இறுதிச்சடங்கிற்கு முன் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் வைக்கப்படும் என்று கருதப்படுகிறது.
ஏனெனில் இளவரசி டயானா உயிரிழந்த போது, அவர் இறுதிச்சடங்கிற்கு முன் இங்கு வைக்கப்பட்டார். ஆனால், பொதுமக்களின் அஞ்சலிக்காக இளவரசர் உடல் வைக்கப்படுமா? இல்லையா என்பது தெரியவில்லை.
இறுதிச்சடங்கு இராணுவ மரியாதையுடன் நடத்தப்படும். இளவரசர் பிலிப் எங்கே அடக்கம் செய்யப்படுவார்? பிலிப் வின்ட்சர் கோட்டையில் இருக்கும் மைதானத்தில் உள்ள ப்ராக்மோர் கார்டனில் அடக்கம் செய்யப்படுவார் என்று பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிராக்மோர் கார்டன் பொதுமக்களுக்கு வரம்பற்றவை என்பதால், பொதுமக்கள் பிலிப்பின் இறுதிச்சடங்கை சென்று பார்க்க முடியாது.
பிராக்மோர் கார்டனில், அடக்கம் செய்ய மூன்று இடங்கள் உள்ளன. டச்சஸ் ஆப் கென்ட் கல்லறை, ராயல் கல்லறை மற்றும் ராயல் அடக்கம் மைதானம் என்று உள்ளன.
இந்த கல்லறைகள் பெரும்பாலும் ஆளும் மன்னர் அல்லாத அரச குடும்ப உறுப்பினர்களுக்கு பயன்படுத்தப்படுவது நினைவுகூரத்தக்கது.