இந்தியா - பிரித்தானியா இடையே FTA ஒப்பந்தம்; எந்த துறைகளுக்கு லாபம்?
இந்தியா மற்றும் பிரித்தானியாவிற்கு இடையேயான FTA ஒப்பந்தம் 15 ஜூலை முதல் அமுலுக்கு வர உள்ள நிலையில், எந்த துறைகளுக்கு லாபம் என்பதை பார்க்கலாம்.
இந்தியா - பிரித்தானியா FTA ஒப்பந்தம்
இந்தியா மற்றும் பிரித்தானியாவிற்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்(FTA) வரும் 15 ஜூலை 2026 அன்று முதல் அமுலுக்கு வருகிறது.

விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் இந்த வர்த்தக ஒப்பந்தத்துடன் இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தம் (DCC) எனப்படும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தமும் நடைமுறைக்கு வரும்.
A historic milestone for India-UK relations.
— Narendra Modi (@narendramodi) June 17, 2026
Delighted to note that the India-UK Comprehensive Economic and Trade Agreement will enter into force on 15th July 2026.
This agreement will significantly boost our bilateral trade and investment.
It will also unlock numerous… pic.twitter.com/I0bMCjdtg4
இந்த ஒப்பந்தம், இந்தியாவும் பிரித்தானியாவும் 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டொலராக இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரித்தானிய சந்தைக்குள் நுழையும் 85% அதிகமான இந்தியப் பொருட்களுக்கு உடனடி வரிவிலக்கு அளிக்கப்படும்
இதன் மூலம், பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கான சுங்க வரிகள் 110 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டு அவற்றுக்கென ஒரு புதிய இறக்குமதி ஒதுக்கீடும் (quota) நிர்ணயிக்கப்படும்.
சொகுசு மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரி 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்படும்.
இங்கிலாந்து விஸ்கி மீதான இறக்குமதி வரிகள் படிப்படியாக 150 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்கப்படும்.
பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த வரிகள், அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மீது 70 சதவீதம் வரையிலும், கடல்சார் பொருட்கள் மீது 21.5 சதவீதம் வரையிலும் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும்.
மேலும், பொறியியல் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் மீது 18 சதவீதம் வரையிலும், தோல் மற்றும் காலணிப் பொருட்கள் மீது 16 சதவீதம் வரையிலும், ஜவுளி மற்றும் ஆடைகள் மீது 12 சதவீதம் வரையிலும் விதிக்கப்பட்டிருந்த வரிகள் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும்.
இந்தியா தனது சுங்க வரிகளில் சுமார் 90 சதவீதத்தை படிப்படியாகக் குறைக்கும் , மேலும் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த அடுத்த பத்தாண்டுகளுக்குள் (2036) 85 சதவீத வரிகள் நீக்கப்படும்.
DCC ஒப்பந்தம்
பிரித்தானியாவில், சுமார் 75,000 இந்தியத் தொழில் வல்லுநர்கள் பணிபுரிகின்றனர். அதே நேரத்தில் 900 க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன.
இவர்களின் சம்பளத்தில் சுமார் 15 சதவீதம் சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகளுக்காகச் செலுத்தப்படுகிறது. அதாவது, இந்திய வம்சாவளி தொழில் வல்லுநர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய ராச்சிய சமூகப் பாதுகாப்புக்கு சுமார் 0.5 பில்லியன் டாலர் பங்களிக்கின்றனர்.
DCC ஒப்பந்ததின் கீழ், நிறுவனங்களால் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கோ அல்லது பிரித்தானியாவிலிருந்து இந்தியாவிற்கோ தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படும் ஊழியர்கள், அவர்கள் பணிபுரியும் நாட்டில் 5 ஆண்டுகள் வரை சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புகளைச் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுவார்கள்.
ஒரு முதலாளி இந்தியாவில் தனது ஊழியரின் சமூகப் பாதுகாப்பிற்காகப் பங்களித்தால், அவர் இங்கிலாந்தில் பணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்காக, அவர் ஒரு காப்பீட்டுச் சான்றிதழைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
DCC ஒப்பந்தம் மூலம், அங்குள்ள இந்திய நிறுவனங்களும் தொழிலாளர்களும் பிரித்தானியாவில் செலுத்த வேண்டியிருந்த சுமார் 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள சமூகப் பாதுகாப்பு கட்டணங்களைச் சேமிக்க முடியும்.
அதேவேளையில், பிரித்தானியாவில் உள்ள மற்ற வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு இந்த விலக்கு கிடைக்காது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |