புலம்பெயர்ந்தோரை கண்காணிக்க வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய ட்ரம்ப்
அமெரிக்க வெள்ளை மாளிகை, புலம்பெயர்ந்தோரை கண்காணிக்க புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
“They Walk Among Us” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த தளம், ‘Alien’ (அந்நியர்கள்) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்த இணையதளம், அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்தோரைப் பற்றிய தகவல்களை சேகரித்து, பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தவர்களை “அந்நியர்கள்” என சித்தரிக்கும் இந்த முயற்சி, பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகை அதிகாரிகள், இந்த தளம் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், விமர்சகர்கள், இது புலம்பெயர் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.
சிலர், இந்த தளம் புலம்பெயர் மக்களை “அந்நியர்கள்” எனக் குறிக்கும் விதம், அவர்களின் மனித உரிமைகளை மீறுவதாகக் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் குடியேற்றம் தொடர்பான விவாதங்கள் நீண்ட காலமாக அரசியல் மற்றும் சமூக ரீதியாக தீவிரமாக இருந்து வருகின்றன.
இந்த புதிய இணையதளம், குடியேற்றக் கொள்கைகள் குறித்து மீண்டும் விவாதங்களை தூண்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |