பூஸ்டர் தடுப்பூசி தேவையா? உலக சுகாதார அமைப்பு தீவிர ஆலோசனை!
கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆலோசனை செய்து வருகின்றது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை ஒழிந்தபாடில்லை. இந்நிலையில் புதிய மாறுபாடு உலக நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.
கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை தொற்றுக்கு Omicron என்று உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியுள்ளது. இந்நிலையில் இந்த புதிய வைரஸ் இந்தியா, அமேரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் தீவிரமாக பரவி வருகின்றது.
இதுவரை இந்தியாவில் 23 பேருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒமிக்ரானை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து நேற்று டெல்லியில் நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது நிபுணர்களுக்கிடையே வெவ்வேறான கருத்துக்கள் இருந்தது.
இதில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்று பலர் கூறினர். இதையடுத்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பரிசீலனை செய்வது தொடர்பாக உலக சுகாதார மையம் ஆலோசனை நடத்துகிறது.
அதன்பின்பு மேற்கொள்ளப்படும் முடிவுகளுக்கு பின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.