லொட்டரியில் ரூ.2,120 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்? இப்போது இவர் பிரபலங்களை விட பணக்காரர்
ஒரே லொட்டரி சீட்டில் அயர்லாந்தை சேர்ந்த நபர் ஒருவர் ரூ.2,120 கோடி வென்று பிரபலங்களை விட பணக்காரர் ஆகியுள்ளார்.
லொட்டரியில் பல கோடி
ஒரே ஒரு லாட்டரி டிக்கெட்டில் ஐரோப்பாவின் மிகப்பெரிய யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் பரிசை நபர் ஒருவர் வென்று கோடீஸ்வரராகியுள்ளார்.
அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் இந்த லொட்டரியில் ரூ.2,120 கோடி (208 மில்லியன் பவுண்டுகள்) தொகையை வென்றுள்ளார். இது அயர்லாந்து லொட்டரி வரலாற்றிலேயே இதுவரை யாருக்கும் கிடைக்காத வெற்றியாகும்.
இந்த லொட்டரி மூலம் கிடைத்த வெற்றியால் இந்த நபர் கால்பந்து வீரர் ஹாரி கேன் (ரூ.1,150 கோடி) மற்றும் பாப் பாடகி துவா லிபா (ரூ.1,100 கோடி) போன்ற பல பிரபலங்களை விட பணக்காரர் ஆகியுள்ளார்.
இந்நிலையில், வெற்றியாளர் தனது லொட்டரி டிக்கெட்டைப் பத்திரப்படுத்தி, லொட்டரி தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அயர்லாந்து தேசிய லொட்டரி அறிவுறுத்தியுள்ளது.
இதன் வெற்றியாளர் ஐரிஷ் நாட்டின் 18வது யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் வெற்றியாளர் ஆவார். இவரை பற்றிய தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |