மிகவும் ஆபத்தானது! 3 வினாடிக்கு 100 பேருக்கு பாதிப்பு.. கொரோனா குறித்து WHO வெளியிட்ட பகீர் தகவல்கள்
கடந்த வாரத்தில் ஒவ்வொரு 3 வினாடிக்கும் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக உலக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை ஒழிந்தபாடில்லை.
கொரோனாவை தொடர்ந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா என அடுத்தடுத்து புதிய வகை மாறுபாடு உருமாறி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் Omicron என்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் Tedros Adhanom கொரோனா வைரஸ் குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நாம் கொரோனா தொற்று நோயின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம் என்று கருதுவது ஆபத்தானது.
தொற்றுநோய் எவ்வாறு பரவும், கடுமையான கட்டம் எவ்வாறு முடிவடையும் என்பது குறித்து தெளிவாக கூற முடியவில்லை. 9 வாரங்களுக்கு முன்பு Omicron முதன் முதலில் அடையாளம் காணப்பட்டதிலிருந்து 80 மில்லியனுக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் ஒவ்வொரு மூன்று வினாடிகளுக்கும் 100 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் ஒவ்வொரு 12 வினாடிகளுக்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகையில் 70% பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை அடைவதன் மூலம் கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று தெரிவித்தார்.