இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம்! COVID-19 தோன்றியது எப்படி? கண்டறியும் முயற்சியில் புதிய பணிக்குழு!
COVID-19 நோய் எவ்வாறு உருவெடுத்தது என்பதை, கண்டறிவதற்கான இறுதி முயற்சியாகப் புதிய பணிக் குழு ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் (WHO) கூறியுள்ளது.
இந்த புதிய பணிக் குழுவில் மொத்தம் 26 நிபுணர்களை உலகச் சுகாதார நிறுவனம் முன்மொழிந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், சீனாவுக்கு அனுப்பப்பட்ட SAGO (Scientific Advisory Group on the Origins of Novel Pathogens) என அழைக்கப்படும் பணிக் குழுவில் இடம்பெற்ற சீன விலங்கு சுகாதார நிபுணர் யாங் யுங்குய் (Yang Yungui), மரியன் கூமான்ஸ் (Marion Koomans), தியா ஃபிஷர் (Thea Fischer) மற்றும் ஹங் குயென் (Hung Nguyen) ஆகிய 4 நிபுணர்களும் அடங்குவர்.
உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அவசர நிபுணர் மைக் ரியான் (Mike Ryan), "இது எங்களுக்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும், மேலும் இந்த வைரஸின் தோற்றத்தை புரிந்து கொள்வதற்கான கடைசி வாய்ப்பும் இதுவாக இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் ஒன்றரை ஆண்டுக்கு-முன் அந்தக் கிருமி அடையாளம் காணப்பட்டது. ஆனால் அது எவ்வாறு தோன்றியது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
வூஹான் நகர சந்தைகளில், கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியதா அல்லது, ஆய்வுக்கூடம் ஒன்றில் இருந்து அது கசிந்ததா என்பது பற்றி பணிக்குழு ஆராயவிருக்கிறது.
அனால், ஆய்வுக்கூடம் ஒன்றிலிருந்து கிருமி கசிந்திருக்கலாம் எனும் சாத்தியத்தை சீனா மறுத்து வருகிறது.