சீனாவிடம் மண்டியிட்டதா உலக சுகாதார அமைப்பு? புதிய கொரோனா தொற்றால் எழுந்த சர்ச்சை
புதிய கொரோனா மாறுபாட்டிற்கு பெயரிடும் போது கிரேக்க எழுத்துக்களில் உள்ள ஒரு எழுத்தைத் தவிர்த்து, சீனாவுக்கு பணிந்ததாக உலக சுகாதார அமைப்பு மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை உலக சுகாதார அமைப்பானது புதிய கொரோனா தொற்றுக்கு Omicron என பெயர் வைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், புதிய கொரோனா மாறுபாடுக்கு Xi என்றே பெயர் வைத்திருக்க வேண்டும்.
Xi சீனத்து ஜனாதிபதியின் பெயர் என்பதால், அந்த வார்த்தையை தவிர்த்துவிட்டு, உலக சுகாதார அமைப்பானது தற்போது Omicron என பெயர் வைத்துள்ளது.
இதனிடையே Xi என்ற எழுத்தையை தவிர்த்ததன் காரணத்தை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, Xi பொதுவாக காணப்படும் பெயர் என்பதால், அந்த வார்த்தையை தவிர்த்ததாக விளக்கமளித்துள்ளது.
ஆனால், உலக சுகாதார அமைப்பின் இந்த முடிவானது, சீனாவின் பொதுவுடைமைக்கட்சியிடம் மண்டியிட்டதையே காட்டுவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா விவகாரத்தில் சீனாவிடம் மிருதுவான போக்கை கைக்கொண்டுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
கொரோனா மாறுபாடு பல நாடுகளில் கண்டறிய்யப்பட்ட நிலையில், இன்னொரு விவாதம் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்க, உலக சுகாதார அமைப்பானது கிரேக்க எழுத்துக்களில் கொரோனா மாறுபாடுக்கு பெயர் சூட்ட முடிவு செய்தது.
அதனையடுத்து கடைசியாக இந்தியாவில் கண்டறியப்பட்ட மிகவும் பாதிப்பு மிகுந்த மாறுபாடுக்கு டெல்டா என பெயர் வைத்தது. இந்த நிலையிலேயே அடுத்த எழுத்தாக Nu என புதிய மாறுபாடுக்கு பெயர் வைத்திருக்க வேண்டும்.
ஆனால் Nu என்றால் புதியது என்ற குழப்பம் ஏற்படும் என்பதால், உலக சுகாதார அமைப்பு அந்த வார்த்தையை தவிர்த்துவிட்டு தற்போது Omicron என பெயர் சூட்டியுள்ளது.
மட்டுமின்றி Nu என்ற எழுத்துக்கு பிறகு Xi என்ற எழுத்து வரவேண்டும், அதையும் குறிப்பிட்ட காரணங்களால் உலக சுகாதார அமைப்பு தவிர்த்துள்ளது.