ஒமைக்ரான் பரவல் அச்சம்...! WHO வெளியிட்ட முக்கிய அறிவுரை
ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக உலக சுகாதார அமைப்பு (WHO) புதிய பயண அறிவுரையை வெளியிட்டுள்ளது.
முதன் முதலில் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்றழைக்கப்படும் வீரியம் மிக்க கொரோனா மாறுபாடு, தற்போது பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஜேர்மனி, கனடா, ஸ்பெயின் நாடுகளுக்கும் பரவியுள்ளது.
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இதற்கிடையில், ஒமைக்ரானை மிகவும் கவலைக்குரிய மாறுபாடு என அறிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, புதிய பயண அறிவுரையை வெளியிட்டுள்ளது.
அதாவது, தடுப்பூசி போடாத 60 அல்லது அதற்கு மேல் வயதுடையவர்கள் அல்லது புற்றுநோய், இதயப்பிரச்சனை மற்றும் நீரிழிவு நோய் போன்ற உடல் நலக்குறைபாடுகள் உள்ளவர்கள் சமூக பரவல் ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு பயணிப்பதை ஒத்திவைக்குமாறு WHO வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது கடுமையான கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்கள் பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று அறிவித்த WHO, ஆனால் பின்னர் தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று அறிவுரையை மாற்றி அறிவித்தது.
ஒமைக்ரான் மாறுபாடு மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தும் என்று நம்பப்படவில்லை, இருப்பினும் இது மிகவும் பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.