இந்த நாட்டிற்கு ஏற்பட்ட நிலை... எந்த நாட்டிற்கும் ஏற்படலாம்! WHO எச்சரிக்கை
இந்தியாவிற்கு தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை எந்த நாட்டிற்கு வேண்டும் என்றாலும் ஏற்படலாம் என்று உலகசுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலையால், இந்தியாவில் நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நாட்டில் பலி எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவிற்கு தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை யாருக்கு வேண்டும் என்றாலும் ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்புத் தலைவர் ஹன்ஸ் கூறுகையில், கொரோனா புதிய அலை உருவாகும் சூழலில் நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது.
அதுவும் கொரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்தும்போது மக்கள் கூட்டங்களைத் திரளாகச் சேர அனுமதிக்கக் கூடாது.
அவ்வாறு அனுமதித்தால் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை எங்கு வேண்டுமானலும் ஏற்படலாம். இதை உணர்வது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளார்.