உலகை அச்சுறுத்தும் Omicron மாறுபாடு! இந்த பாதிப்புகள் அதிகரிக்கும்.. WHO கடும் எச்சரிக்கை
Omicron வேகமாக பரவி வருவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று WHO எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவை தொடர்ந்து Omicron வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
கொரோனா மாறுபாடுகளில் இதுவரை கண்டறியப்பட்ட மாறுபாடுகளிலேயே இது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது.
இதனால் உலக நாடுகள் பீதியில் உள்ளனர். இது கோவிட 19 வகையை ஒப்பிடும் போது வேகமாக பரவக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுவரை 57 நாடுகளில் புதிய வகை Omicron மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்டா மாறுபாட்டைக் காட்டிலும் தீவிரத்தன்மை சமமாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் கூட அதிகமான மக்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அதிகரிக்கும்.
எனினும் பாதிப்பு அதிகரிப்பதற்கும் இறப்புகள் அதிகரிப்புக்கும் இடையில் கால தாமதம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளனர்.