ஒமைக்ரான் மாறுபாட்டால் ஆபத்து ‘மிக அதிகம்’.. உலகம் தயாராக வேண்டும்! WHO எச்சரிக்கை
ஒமைக்ரான் மாறுபாடு தொடர்புடைய ஒட்டுமொத்த உலகளாவிய ஆபத்து ‘மிக அதிகம்’ என உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
ஒமைக்ரான் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி, மாறுபாடு எவ்வாறு பரவுகிறது மற்றும் அது நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்க முடியுமா என்பதைப் பொறுத்து, உலக அளவில் ஒமைக்ரான் மேலும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
அதன் பண்புகள் பொறுத்து, எதிர்காலத்தில் கொரோனா தொற்றுகள் அதிகரிக்கலாம், இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஒமைக்ரான் குறித்து தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகளின் தரவு எதிர்வரும் வாரங்களில் கிடைக்கும் என WHO எதிர்பார்க்கிறது.
தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரான அதன் தப்பிக்கும் திறனை நன்கு புரிந்துகொள்ள மேலும் ஆராய்ச்சி தேவை.
நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், தற்போது கிடைக்கக்கூடிய தடுப்பூசிகள் கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிராக சில பாதுகாப்பை வழங்குகின்றன என்று கருதுவது நியாயமானது.
தகுதியான மக்களுக்கு தடுப்பூசிகளை போடுவதை துரிதப்படுத்தவும், அத்துடன் ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தி சர்வதேச பயண நடவடிக்கைகளை சரியான நேரத்தில் மேற்கொள்ள வேண்டும் என உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.